Monday, January 8, 2018

காலத்தின் துளி



காலடிச் சுவடுகளை
புதர்கள் சூழ்ந்து விட்டன
வாழ்க்கையின் கூர் வடிவங்கள்
இடரப்போவதில்லை இனி.
திசைகாட்டிகள் தேவையற்ற
பாதையில்
காலக்கடலின் முகத்துவாரத்தில்
நகர்ந்து கொண்டிருக்கிறது
காலத்தின் மற்றோர் துளி.


எழுதிய நாள் : 13-ஏப்ரல்-2017

ஒளிப்படம் : ஜெயேந்திரராஜன்

No comments:

Post a Comment