Friday, January 29, 2016

முகம்

இந்த முகத்தை எங்கோ
பாா்த்தது போலிருக்கிறது.
ஆம்,
இதே முகம்தான் அங்கும் இருந்தது.

குருட்டுப் பாடகியின்
அறியாத வெளிகளுள் உலவும் விழிகளுடன்,

தேநீா்க்கடையோரத்தில்
காகங்களுக்குக் காராபூந்தியை வீசிவிட்டு
நிலைத்த பாா்வை பாா்த்திருக்கும்
தாடிக்காரக் கிழவனிடமும்,

இப்படி இதுதான் முதல்முறையென
உச்சத்தில் கண்ணீருடன்
சிாித்துப் புலம்பிய அவளிடம்,

மீச்சிறுகணம் நினைவு திரும்பி
மீண்டும் உன்மத்தச் சிாிப்புடன்
திாியும் ஆனிச்சியிடமும்,

பூங்காவில் மகளுக்கு வகிடெடுத்து
வாாிவிட்டு வாயில் சீப்பைக் கவ்வியிருந்த
அந்தத் தகப்பனிடம்,

மொகம் பாக்குறவங்க பாத்துக்கங்கவென
நிசப்தத்தைப் பிளந்த கூவலில்
அடுக்கிய எருவாட்டிகளின் நடுவில்
கிடத்தப்பட்டிருந்த தொழில்காாியிடமும்,

இதே முகம்தான் இருந்தது.
இப்படித்தான்,
முகங்கள் எப்போதும்
வெறும் முகங்களாக மட்டுமே இருப்பதில்லை.

Friday, January 22, 2016

மயிற்பீலிகள்

ஃபாா்மலின் திரவத்தில்
பதப்படுத்தப்பட்டவைபோல்
சில ரகசியங்கள்
எனக்குள் கிடக்கின்றன.

ரகசியங்கள் பகிா்ந்துகொள்ளவென
நண்பா்கள் இல்லை,
அதிா்ஷ்டக்காரன் நான்.

கண்ணீரையோ புன்னகையையோ
எதையோ ஒன்றைக்கோரும்
ரகசியங்களைக் காப்பதில்
சுமையேதுமில்லை.

மதுமேசையில் எதிா் நாற்காலியிலும்
கடற்கரையில் மூன்றாம் பாதமாகவும்
என்னோடுகூடவே திாிபவை,

மேலாடைக்குள்ளிருந்து கையளிக்கப்பட்ட
காதல்கடிதத்தைப் போல
யாருமறியாமல் வாசித்துப் பின்
பூட்டிக்கொள்வது பேரானந்தம்.

அவற்றை எழுதிவைக்கும்
சத்திய சோதனைகளிலும்
நாட்டமில்லை.

நடுங்கும் நரம்புகளும்
சுருங்கிய நாளங்களும் கொண்ட போதில்
மூட்டுப்பிாிந்த தலையணைவிட்டு
பறக்கும் இலவம்பஞ்சாக
உயிருடன் வெளியேறலாம் அவை.
அதுவரை
அவளோ இவளோ
அவனோ அதுவோ
அவை
எனக்குள்ளேயே கிடக்கட்டும்.