நத்தையூர்ந்த
மணல்தடத்தில்
குமிழ்ந்தூறும்
என்றோ புதைந்த முத்தங்கள்
ஆவியாகாத
முத்தப் பொழுதுகளின் ஈரம்
பிசினாய்
சுரக்கும்
பச்சையம்
இற்ற கிளைகளில்
கருநாக
விஷத்தின் அதிதூய்மையுடன்
ஒரு முத்தம் உறைந்திருக்கிறது
படிமமாய்க்
கிடக்கும் ஆதிமனிதனின் உதடுகளில்
அருகில்
இல்லாத போதில்
காற்றில்
உதிர்க்கப்பட்ட முத்தங்கள்
மகரந்தம்
பூசிய கால்களால்
காற்றில்
வரைகின்றன உதட்டுக் கோடுகளை
இறுக்கிப்பிணைத்த
விரல்களுக்கிடையில்
சத்தமின்றி
கடத்தப்படுகிறது
முத்தம்
ஒன்று.
பரிசுத்தமான
ஒரு முத்தம்
உதடுகளில்
இருக்கிறது
இன்னும்
தரப்படாமலே…
எழுதிய நாள் :
24-ஜூன்-2017
No comments:
Post a Comment