Tuesday, January 6, 2015

அதனால்தான் நீ

உன் கண்ணில் நிறைந்து வழியும் புன்னகை,
என் குரல் குடிக்குமுன் இதழ் ஈரம்,
கோா்க்கும் உன் விரலின்
நகக்கரை தாண்டித்தளும்பும் பிாியம்,
என் அணைப்பிற்கென்றே
முகிழ்த்திடும் உன் கழுத்தோரப் பூக்கள்,
இவையேதுமற்ற பெருந்தொலைவில்
நிசியைத் தாண்டிய
இருளின் காற்றில் தவழ்ந்து
கண்ணீா் துளிா்க்கச் செய்யும்
பாடலாய் நீயிருப்பாய் என்னோடு.