என்ன பாப்பா நீ
இப்படிச்
செஞ்சுட்ட?
நீதிமன்றத்து
மொதப்படியில நீ நின்ன,
தெம்பாயிருந்தோம்.
காலுல சிக்குன அந்த நூல
அறுத்தெறிஞ்சிருவன்னு
இருந்தமே
கழுத்த
நெறிச்சிருச்சே பாப்பா.
வெள்ளக்
கோட்டுக் கனவெல்லாம்
கருப்புப்
போஸ்டரா ஒட்டிக் கெடக்குதே பாப்பா
இப்படிக்
கருப்புச் சேதியா வர்றதுக்கா
அம்புட்டுக்
கனவு?!
நாங்கெல்லாம்
சொரணை கெட்டவிங்கன்னு
தெரிஞ்சு
போச்சா ஒனக்கு?
ரோஹித்துக்கும்
முத்துக்கிருஷ்ணனுக்கும்
நாங்க என்ன செஞ்சோம்னும்
தெரிஞ்சு
போச்சு ஒனக்கு
அப்படித்தான
பாப்பா?
ஒம்மேல
நம்பிக்கையில்லாம
நீ செத்துட்டன்னு சொல்றாய்ங்க.
நீ மாண்டுக்கிட்டது
எங்க மேல நம்பிக்கையில்லாமத்தான பாப்பா?
நீட் தேர்வை எதிர்த்துப்
போராடிய அனிதாவின் மரணம் தந்த வலி.
எழுதிய நாள் :
02-செப்டம்பர்-2017
No comments:
Post a Comment