Thursday, January 4, 2018

கொலைச்சுவை

கொலை செய்தல் என்பது
பல்லியைப் போல்
நாக்கின் ஒற்றைச் சொடுக்கில்
உள்ளிழுத்து முடிப்பதல்ல.
கூராயுதத்தால் கழுத்தைத் துண்டாக்குவதும்
குறி பார்த்துத் துப்பாக்கியால் கொல்வதும்
நொடிகளுக்கும் குறைவான
அசுவாரசியக் கொலைகள்.
பாம்பைக் கொல்வதில்தான் இருக்கிறது
உன்னதக் கொலைச்சுவை.
தலையைச் சிதைத்து
இயக்கத்தை நிறுத்தவேண்டும்.
பின்பு
வெகு இயல்பாக அமர்ந்து
வால் நுனியில் வெளியேறும்
உயிரின் இறுதி அசைவுகளில்
லயித்திருக்க வேண்டும்
அவள் என்னிடம் செய்வதைப் போல.



எழுதிய நாள்: 20-ஜூலை-2016

No comments:

Post a Comment