Monday, January 8, 2018

கண்ணீர் என்பது

சிரிப்புப் பரல்கள் சிதறிக்கிடக்கும் காரை உதிரும் வீடு
இறுதி உரையாடலின் போது ஒலித்த விருப்பப்பாடல்
கைவிட்டுப்போனதின் நகல் பத்திரம்
புகைப்படத்தின் முன் வைக்கப்பட்ட முதல் சம்பளம்
துரோகம் நினைவுறுத்தும் ராத்திரியின் அரக்க நிசப்தம்
குலதெயவத்தின் முன் வைக்கப்பட்ட பாஸ்போர்ட்காரனின் அரபுக் கனவுகள்.
நெடுந்தகிப்பைத் தணித்த புணர்வின் உச்சம்.
இவைதான்.
எல்லாமும் தான்.
கண்ணீர் என்பது வெறும் திரவம் அல்ல.


எழுதிய நாள் : 13-ஏப்ரல்-2017

No comments:

Post a Comment