உனக்கு
நானிழைத்த
தவறுகளும் தப்புகளும்
பதங்கமாகாப் பருண்மையுடன்
உனக்குளளே கிடக்கட்டும்.
சுமக்கும் வடுக்களை
நடுக்கடல் பனிப்பாறையென
விழிகளில் மிதக்கவிடு.
மன்னிப்பின் மன்றாட்டுக்காய்
வாா்த்தைகளைப் படையலிடப்
போவதில்லை நான்.
உன்
நுண்நொடி இமைச்
சிமிட்டல்களும்
என் இரத்தத்திசைகளில்
சாட்டையாய்ச்
சொடுக்கியபடியிருக்கவேண்டும்
நீயென்
பொக்கிஷமென.