Thursday, February 13, 2014

மன்னிப்பு


உனக்கு
நானிழைத்த
தவறுகளும் தப்புகளும்
பதங்கமாகாப் பருண்மையுடன்
உனக்குளளே கிடக்கட்டும்.
சுமக்கும் வடுக்களை
நடுக்கடல் பனிப்பாறையென
விழிகளில் மிதக்கவிடு.
மன்னிப்பின் மன்றாட்டுக்காய்
வாா்த்தைகளைப் படையலிடப்
போவதில்லை நான்.
உன்
நுண்நொடி இமைச்
சிமிட்டல்களும்
என் இரத்தத்திசைகளில்
சாட்டையாய்ச்
சொடுக்கியபடியிருக்கவேண்டும்
நீயென்
பொக்கிஷமென.