Thursday, January 4, 2018

இரவுநடை

விடுவிக்கவியலாத சில கதைகள்,
பெளா்ணமிக் கடலாய்
அவளும் அவளுடனான நிமிடங்களும்,
கட்டுக்களைக் கரைத்துவிட்ட
சிறுபோதை,
இதமான சூட்டில் இளையராஜா.
ஒரு கொலையோ சுயகொலையோ
நிகழந்திடக்கூடிய சாத்தியங்களுடன்
இரவின் மாயக்குகைக்குள்
நடந்து கொண்டிருக்கும்
இவன் வழியில்
கொலைக் கருவிகள் ஏதும்
இல்லாதிருத்தல் நலம்



எழுதிய நாள்: 27-ஜூலை-2016

No comments:

Post a Comment