Monday, January 8, 2018

பரிமாணங்கள்

பிம்பங்கள் பதியாப் பார்வை
காலத்தை எரிக்கும் ஆழப்பெருமூச்சு
கறுத்த மௌனம்
பார்வை கலைத்தெறியும் தலையசைப்பு
சொற்களை நகரவிடாத விரல்களின் இறுக்கம்
ஏதாவதொன்றில்
கணத்தைக் கரைத்துக்கொண்டேயிருக்கிறது மனம்
கண்ணீர் ஒன்றே அழுகையில்லை.


எழுதிய நாள் : 21-ஜூன்-2017

No comments:

Post a Comment