பிம்பங்கள்
பதியாப் பார்வை
காலத்தை
எரிக்கும் ஆழப்பெருமூச்சு
கறுத்த
மௌனம்
பார்வை
கலைத்தெறியும் தலையசைப்பு
சொற்களை
நகரவிடாத விரல்களின் இறுக்கம்
ஏதாவதொன்றில்
கணத்தைக்
கரைத்துக்கொண்டேயிருக்கிறது
மனம்
கண்ணீர்
ஒன்றே அழுகையில்லை.
எழுதிய நாள் :
21-ஜூன்-2017
No comments:
Post a Comment