Tuesday, March 24, 2009

அவள்

பாடல்களால் நனைந்து
கிடக்கின்றன நாட்கள்;
தினம் தினம் பாடல்கள்..
செவி கடந்தும்,
மனம் பிடித்தும்,
புதியன,
பழையன,
பழையனவாய்த் தோன்றும்
புதியன,
தேநீர்க் கடைகளில்,
வைபவக் கலகலப்பில்...


தினம் தினம் பாடல்கள்.
இசைக்காய் சிலவும்
வரிகளுக்காய் சிலவும்
மனம் படியும் பாடல்கள்.
எத்தனை இருந்தும்
நினைத்த கணம்-இதழ்
நனைக்கும் புன்னகை தருவது
இசையும் ராகமும்
புரியாத வயதில்
மனம் படிந்த
அந்தப் பாடல் தான்.

மருந்து

கடற்கரையிலும்
பூங்காக்களிலும்
உடற்பயிற்சிக்காய்
எஜமானிகள்;
வீடுகளில்
வேலைக்காரிகள்.