உன் நினைவூட்டுகிறாள்.
நெளி கூந்தல்,
புடவை மடிப்பு,கீழுதட்டு ஈர வரி,
விரல் பிடித்த மருதாணி,
இப்படிப் பல...
ஊதிப் பெரிதாக்கி
புகையற்ற காற்றாய்
கடந்து போகிறாள்
கடந்து போகிறாள்
ஓர் நாள் இவள்;
மற்றோர் நாள் அவளும்.
எல்லோரும் உன் போலே,
என்றாலும்
யாரும் நீ இல்லை.
திசை மறந்த
கைகாட்டி மரமாய்
கணக்கின்றி சுழல்கின்றன
காற்றில்
என் விழிகள்!