Monday, January 8, 2018

புனிதத்தீ

அத்தனை துளைகளிலிருந்தும்
ஒழுகிக் கொண்டிருக்கிறது மனம்
கருப்புக் கண்ணாடியால் கண்களை அலங்கரிக்கிறேன்
நெஞ்சின் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொள்கிறேன்
விரல்முனைகளில் தீயின் குட்டிகள் நெளிகின்றன
மணமூட்டியணிந்த வார்த்தைகளுக்குள்ளே
நெறிக்கும் காமம் காத்திருக்கிறது.
இறைப்பாசுரங்களைப் பாடியபடி திரிகள் ஏற்றப்படுகின்றன
விட்டில்களை மறுத்து முகம் திருப்பித் திரும்புகின்றன சுடர்கள்
விளக்கின் அடியிருட்டுக்குள் பதுங்கியிருக்கிறது அது
திரியின் புனிதம் போற்றுதும்
விட்டிலின் பிணங்களைத் தூற்றுதும்.



எழுதிய நாள் : 28-நவம்பர்-2017

No comments:

Post a Comment