இரவல் சொற்கள் நிறைந்த பாடலாய்
அறைச்சுவரில்
தொங்கிக்
கொண்டிருக்கிறது
கண்ணாடி
நானோ
வேறு யாரோ பதிக்கும் முகங்களை
நொடிகளில்
கழுவிடும்;
நினைவுகளைத்
தூக்கிச்செல்லாத
சட்டகத்து
ஆறு.
சில உருவங்களை மட்டும்
கண்ணாடிகள்
உதிர்ப்பதில்லை
ஒட்டுப்பொட்டுகளின்
பசையழுக்கைப் போல.
உருமாறும்
தழும்புகளென பிம்பங்கள்
எப்போதும்
அதனில்.
ஒளியில்லா
இரவுகளில்
தனிமையின்
அனந்த மலர்ச்சியை
இருள்வனத்துள்
இசைத்தபடியிருக்கும்.
பிரதிபலிப்பது
சலிப்படைந்த
நாளில்
மெல்லத்
தன் ரசத்தை உதிர்க்கத் தொடங்கும்
கண்ணாடி
ஓய்வுநாளில்
உறங்கும் பரத்தையின் முகத்தில்
தன்னைப்
பார்த்துக்கொள்ளும்.
எழுதிய நாள் :
13-டிசம்பர்-2017
No comments:
Post a Comment