Wednesday, August 15, 2018

பெருமீன்கள் உலரும் கரை

மெட்டி விரல்களை அலைகள் நனைக்க
கடல் பார்த்து நின்று கொண்டிருக்கிறாள்.
உதட்டில் படியும் உப்புக்காற்றில்
வேறொரு எச்சில் சுவையின் ரேகைகள்.
கண்களின் சுரப்பியை உறிஞ்சிய
மேகம் கருஞ்சூலியான பொழுதில்
ஒரே நிறம்
ஒரே மொழி
ஒரே சுவை
கடல் அவள் வானம்.
நிலவின் செதில்களைப் புடைக்கும் அலையில்
காட்சிப்பிழையாய் தூரப் படகொளி.
பெருமீன்கள் உலரும் கரையில்
வெற்றுத்தூணாய் நிற்கிறாள்
திசையின் தீயை அணைத்து.


எழுதிய நாள் : 24-ஜனவரி-2018
மணல்வீடு காலாண்டிதழ் ஏப்ரல் 2018 இதழில் பிரசுரமானது

No comments:

Post a Comment