புறமொதுக்கப்பட்ட மெய்ம்மைகளின்
குவியம் மங்கிய முகங்களின் மீது
நிற்கிறது
நகல்களின் அரியணை
இரண்டு பிக்சல்
கூடுதலாக வீசியெறிந்து
நகல்களின் பிரதிகளை நிலைப்படுத்தலாம்
சில்வர் நைட்ரேட்டின்
புகைமூட்டத்தினிடையே எழும்
மெய்மைகளின் குரல் மீது
ஏறி இறங்குகிறது
மறதியின் நாளை.
நண்பர் சுடலைமணியின் ஒளிப்படத்திற்காக
எழுதிய நாள் : 25-ஜூன்-2018

No comments:
Post a Comment