Thursday, August 1, 2019

உடும்பின் காலடிக் காலம்


எப்போதும் என் நிறுத்தத்தில் இறங்கியதில்லை நான்
மழை ஒரு திசையில் அடித்துச் செல்லும்
பாடல்களில் ஒரு முள்கொக்கி தொங்கும்
ஐந்து விரல்களில் பத்து விரல் சுவடுகள்
உறக்கத்தில் இடறும் கண்ணீர்
முயக்கத்தில் வேறு வியர்வைச் சுவை
மரக்கிளையின் மீது உதிரும் இறகுக்கு வானம் பார்த்து ஏக்கம்
நீளக்கொடியின் கொழுந்துகளில் நரம்புகளென வேர்கள்
தழும்புகளை வருடும் விரல்களில் வெட்டுக்காயத்தின் பிசுபிசுப்பு
பொடியும் சுவரைப் பற்றிக்கொண்ட உடும்பின் கால்களைச் சுற்றி
காலம் நடந்துகொண்டிருக்கிறது
தந்திகளில் பின்னிய சிலந்திக்கூடுகளில்
விடுபட்ட நட்சத்திரங்களைத் தேடி
அளைகின்றன இசையறிந்த விரல்கள்.

எழுதிய நாள்  6 அக்டோபர் 2018

No comments:

Post a Comment