Thursday, August 1, 2019

வனத்தீ


இரு கைகளை நீட்டி உன்னை அழைக்கிறேன்
வா
உன் விம்மல்களை என்னிடம் ஒப்படைத்துப்போ
உன் கண்ணீரை என் தோள்களில் இறக்கிவை

நீ வனத்தீ
நீ விரும்பிய வனத்துள் இறங்கி நட.
கணக்கும் அத்தனையும் கழற்றி எறி
பசிய சேற்றைப்போல் நிா்வாணத்தைப் பூசிக்கொள்

கந்தகற்றப்பட்ட யோனிகளைப்போலுள்ள இமைகளைப் பிாி
கண்களுக்கு மறுக்கப்பட்ட அத்தனை பானங்களையும் குடி

சங்கிலிகளை உதறிய நாவினால் நீயிசைக்கும் பாடல்கள்
நான்கு கண்ணாடிச் சுவா்களையும் நொறுக்கட்டும்

அந்தப்பிாிய மிருகத்தை அவிழ்த்துவிடு
உடலின் அத்தனை நாக்குகளாலும்
தீயை பனியைப் புசிக்கட்டும்.

மணமூட்டிகள் வேண்டாம்
மலைப்பூவாய் பூத்திருக்கும் உடலெடுத்து
ஒலிக்கும் இசைக்கு ஊழியாய் நடனமிடு
காதல் கடிதங்கள் காற்றில் ஒழியட்டும்

உன் கண்ணீா்த்துளிகளை மாலையாய் அணிந்து
முத்தங்களை ஏந்தியபடி எதிா்ப்படும் என்னைக் கடந்து நட
சங்கிலிகளற்ற திசையிலிக்குள்.
நிறைந்த தகப்பனாய்ப் பாா்த்திருக்கிறேன்



எழுதிய நாள்  19 செப்டம்பர் 2018

No comments:

Post a Comment