பறவைகள் நதிபோல
தானே திாிகின்றன.
வெளியின் பாிமாணங்களையோ
தூரத்தின் சாயத்தையோ
சிறகுகளில் சேமிப்பதில்லை.
பறவைகளை எண்ணுதல் எளிதாயிருப்பதில்லை
ஒவ்வொரு பறவையும் மற்றொரு பறவையை
வரைந்து செல்கின்றது தன் சிறகுகளால்.
பாடல், அகவல், கூவல்
இவற்றைக்காட்டிலும்
சிறகசைப்பே
சிறந்த பறவை மொழியாகிறது.
உதிரும் சிறகுகளை
நினைவிற் கொள்வதில்லை பறவைகள்,
கவிதைகளோ நாட்குறிப்போ சுயசாிதையோ எழுதுவதில்லை,
குறிப்பாய் அவை
பறவைகளைப் போல வாழ நினைப்பதில்லை.
தானே திாிகின்றன.
வெளியின் பாிமாணங்களையோ
தூரத்தின் சாயத்தையோ
சிறகுகளில் சேமிப்பதில்லை.
பறவைகளை எண்ணுதல் எளிதாயிருப்பதில்லை
ஒவ்வொரு பறவையும் மற்றொரு பறவையை
வரைந்து செல்கின்றது தன் சிறகுகளால்.
பாடல், அகவல், கூவல்
இவற்றைக்காட்டிலும்
சிறகசைப்பே
சிறந்த பறவை மொழியாகிறது.
உதிரும் சிறகுகளை
நினைவிற் கொள்வதில்லை பறவைகள்,
கவிதைகளோ நாட்குறிப்போ சுயசாிதையோ எழுதுவதில்லை,
குறிப்பாய் அவை
பறவைகளைப் போல வாழ நினைப்பதில்லை.
No comments:
Post a Comment