Friday, February 20, 2009

பிரார்த்தனை

நின்றிருந்த பெண்
தலையிலிருந்து விழுந்த‌
ரோஜாவை யாரும்
மிதித்து விடக்கூடாதென‌
வேண்டிக்கொண்டது மனம்,
கூடவே
மகளிர் இருக்கையில்
அமர்ந்திருக்கும் என்னை
யாரும் எழச்சொல்லக்
கூடாதெனவும்…

No comments:

Post a Comment