என் சித்திரத்தை வரைவதில்
சிரமமேயில்லை
அவர்களுக்கு.
பல பெயர்களில்
பல நிறங்களில்
பல வாசனைகளில்
பல வடிவங்களில்
அவரவர்
கைகளில்
என் உருவம்.
உதட்டச்சும்
செருப்புத்தடமுமாய்
அவர்களின்
நாற்றத்தையும் நிறத்தையும்
பதிகிறார்கள்
என் உருவத்தின் மீது.
ம்...
கருப்போ
வெள்ளையோ
அவர்கள்
என் சித்திரத்தை
வரைந்து
கொண்டேயிருக்கிறார்கள்
பிதாவே.
எழுதிய நாள் : 09-01-2018
No comments:
Post a Comment