Friday, January 29, 2016

முகம்

இந்த முகத்தை எங்கோ
பாா்த்தது போலிருக்கிறது.
ஆம்,
இதே முகம்தான் அங்கும் இருந்தது.

குருட்டுப் பாடகியின்
அறியாத வெளிகளுள் உலவும் விழிகளுடன்,

தேநீா்க்கடையோரத்தில்
காகங்களுக்குக் காராபூந்தியை வீசிவிட்டு
நிலைத்த பாா்வை பாா்த்திருக்கும்
தாடிக்காரக் கிழவனிடமும்,

இப்படி இதுதான் முதல்முறையென
உச்சத்தில் கண்ணீருடன்
சிாித்துப் புலம்பிய அவளிடம்,

மீச்சிறுகணம் நினைவு திரும்பி
மீண்டும் உன்மத்தச் சிாிப்புடன்
திாியும் ஆனிச்சியிடமும்,

பூங்காவில் மகளுக்கு வகிடெடுத்து
வாாிவிட்டு வாயில் சீப்பைக் கவ்வியிருந்த
அந்தத் தகப்பனிடம்,

மொகம் பாக்குறவங்க பாத்துக்கங்கவென
நிசப்தத்தைப் பிளந்த கூவலில்
அடுக்கிய எருவாட்டிகளின் நடுவில்
கிடத்தப்பட்டிருந்த தொழில்காாியிடமும்,

இதே முகம்தான் இருந்தது.
இப்படித்தான்,
முகங்கள் எப்போதும்
வெறும் முகங்களாக மட்டுமே இருப்பதில்லை.

No comments:

Post a Comment