Monday, March 29, 2010

தேடுதிசை

கடந்து போகையில்
Will You Cross the Skies For Me / Vinnaithaandi Varuvaaya (New Rahman Tamil CD)தினம் ஒருத்தி
உன் நினைவூட்டுகிறாள்.
நெளி கூந்தல்,
புடவை மடிப்பு,
கீழுதட்டு ஈர வரி,
விரல் பிடித்த மருதாணி,
இப்படிப் பல...
உளத்தடித் தீயைUltimate Love Songs Collection - Always Yours { Time Life } { Various Artists }
ஊதிப் பெரிதாக்கி
புகையற்ற காற்றாய்
கடந்து போகிறாள்
ஓர் நாள் இவள்;
மற்றோர் நாள் அவளும்.
எல்லோரும் உன் போலே,
என்றாலும்
யாரும் நீ இல்லை.
திசை மறந்த
கைகாட்டி மரமாய்
கணக்கின்றி சுழல்கின்றன
காற்றில்
என் விழிகள்!

7 comments:

  1. அன்பு முத்துக்குமார், இன்றுதான் உங்கள் வலைப்பதிவுகளில் சிலவற்றை வாசித்தேன்.வசீகரமான மொழியில் எழுதுகிறீர்கள்.எனக்குப் பிடித்திருந்தது.இன்னும் பிறவற்றையும் படித்துவிட்டு எழுதுகிறேன்.டெம்ப்ளேட் அழகு.

    ReplyDelete
  2. ////எல்லோரும் உன் போலே,
    என்றாலும்
    யாரும் நீ இல்லை./////

    பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
  3. திரு.ச.தமிழ்ச்செல்வன் ,

    திரு.பனித்துளி சங்கர்
    மிக்க நன்றி.
    தொடர்ந்து வாசியுங்கள்; கருத்துக்களைப் பதிவிடுங்கள். நன்றி.

    ReplyDelete
  4. Miga arumai anna...nalla ezhunthungo

    ReplyDelete
  5. எல்லோரும் உன் போலே,
    என்றாலும்
    யாரும் நீ இல்லை.
    திசை மறந்த
    கைகாட்டி மரமாய்
    கணக்கின்றி சுழல்கின்றன
    காற்றில்
    என் விழிகள்!......ennai kavarntha varigal......ungal ezhuthu payanam thodarattum....Velu

    ReplyDelete
  6. எல்லோரும் உன் போலே,
    என்றாலும்
    யாரும் நீ இல்லை.
    திசை மறந்த
    கைகாட்டி மரமாய்
    கணக்கின்றி சுழல்கின்றன
    காற்றில்
    என் விழிகள்! ennaku piditha varigal......vaazhthukkal!

    ReplyDelete