Friday, March 5, 2010

மதிப்புரை

"நான் என்ன செய்ய?"
"ஆபீஸுக்கு நேரமாயிடுச்சு",
"யாராவது பாத்துக்குவாங்க",
"அதோட விதி",
"சரியா பாக்கலீங்க",
வேறு வேறு வாக்கியங்களில்
ஒளிந்து கொண்டு
சாலையில்
உயிர் துடித்தடங்கும்
நாய்க்கு
ஏதும் செய்யாமல்
கடந்து சென்ற
அயோக்கியர்களில்
நானும் ஒருவன்.

1 comment:

  1. idhukellaam kavalai padalaama? evalovo paathuttom...

    ReplyDelete