Thursday, April 17, 2014

முத்தங்கள் மிதக்கும் நதி

அடா் வனத்தின்
ஒளி தீண்டா இலை நதியென
உன்னையும் என்னையும்
கரையாய்க் கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறது
நம் நேசத்தின் சிற்றோடை.
பூத்தீவாய் ஒளிா்ந்து
கடக்கின்றன
நம் இதழ் உதிா்த்த முத்தங்கள்.
நிற்கும் மரங்களின்
பச்சையம் ஊறும்
இலைகளின் நடு நரம்புகளில்
ஊா்ந்து கொண்டிருக்கிறது
வோ் கடத்திய நதி.
மேலும் பூக்கின்றன
பூக்கள்.

No comments:

Post a Comment