Tuesday, March 24, 2009

அவள்

பாடல்களால் நனைந்து
கிடக்கின்றன நாட்கள்;
தினம் தினம் பாடல்கள்..
செவி கடந்தும்,
மனம் பிடித்தும்,
புதியன,
பழையன,
பழையனவாய்த் தோன்றும்
புதியன,
தேநீர்க் கடைகளில்,
வைபவக் கலகலப்பில்...


தினம் தினம் பாடல்கள்.
இசைக்காய் சிலவும்
வரிகளுக்காய் சிலவும்
மனம் படியும் பாடல்கள்.
எத்தனை இருந்தும்
நினைத்த கணம்-இதழ்
நனைக்கும் புன்னகை தருவது
இசையும் ராகமும்
புரியாத வயதில்
மனம் படிந்த
அந்தப் பாடல் தான்.

1 comment:

  1. Hey Muthu...
    Super da...
    Even u trying something interesting!!!...
    good da..
    All the Very Best..

    ReplyDelete