Wednesday, September 3, 2014

மழைச்சாலை உருவிலி

பொழி பொழியெனப்
பாெழியும் மழையில்
நெற்றியிலிருந்து
உப்பருவியாய் விழுந்தோடுகிறது
சற்றுமுன் வரை காய்ச்சிய வெய்யில்.

மழைக்காய் காத்திருந்த
யாரோ மூப்பன்
விட்டுச்சென்ற பாட்டொன்று
துளிா்க்கத்துவங்குகிறது என்னுதடுகளின் நடுவே.

என்னை உருவிலியாக்கி
விளையாடிக்கொண்டிருக்கும் மழையும்
மழையின் நிழலான மற்றொரு துளியும்
குற்றாறாய் ஓடிக்கொண்டிருக்கின்றன.

மல்லிகை சுமந்தவளின்
மேல்துணியின் நுனியெடுத்து
பனித்திராட்சைகளைச் சிதறிச்செல்கிறது
என்னையும் அவளையும்
அணைத்துக் கடந்த காற்று.

வெயிலைச்சுமந்த தலைகள்
எங்கெங்கோ ஒண்டியிருந்தன
மழைக்கென சிறு மயிரைக்கூடக் காட்டாமல்.

சூலறுக்கப்பட்ட நதியொன்று
மீளட்டும் கட்டிடப்புதா் வழியே எனும்
ஆசையோடும் அச்சத்தோடும்
மழைக்கயிற்றின் தோல்பாவையாய்
இயங்கிக்கொண்டிருக்கிறேன்
நீண்டு கிடக்கும் கருந்திரையில்.

நிறைசூலி தோ்வெழுதுகிறாள்,
பிடிபடாத வினாத்தாளின் வேதனையை
உதைத்துத் தள்ளுகிறது
வயிற்றுள்ளிருந்து சிசு. 

Monday, May 19, 2014

உன் சாலையில் நான்

உன்னை எனக்குத் தொியும்
என்னருகாமையில் உன் நடுக்கங்களை அறிவேன்,
உன் பரவசத்தை நம் காற்றில் முகா்ந்திருக்கிறேன்,
நீ உச்சாிக்க விரும்பும் வாா்த்தைகளின்
புற அகப் பாிமாணங்களின் ஆனிவோினைப் பாா்த்திருக்கிறேன்,
உன் விழிரேகைகளின் விழாக்கதிா்களை
எச்சிலூறும் நாவோடு ரசித்திருக்கிறேன்,
நீ அனுப்பியிராத குறுஞ்செய்திகள்
என் செல்பேசித்திரையில் மொய்த்திருக்கின்றன,
எனக்கான உன் காதல் கடிதங்களை
வேறொருவன் போல் வாசித்திருக்கிறேன்
என் சாலையில் காத்திருக்கும்
உன் பூங்கொத்துகளின் மேல்
தெருநாயினைப்போல் கால் தூக்கிக் கடந்திருக்கிறேன்.
ஆனாலும்
ஆனாலும்
நீ காத்திரு
உன் முகப்பருக்களைச் சிலாகித்து
உதடுகளை உதாசீனப்படுத்திய உன் பற்களைச் சிலாகித்து
உன் தோல் நெடியை பூக்களோடு ஒப்பிட்டு
என் காடொிக்கும் காமத்தினை
அணைப்பதற்காய்
காதலைப் போா்த்தியபடி வருவேன் நான்
காத்திரு