Tuesday, April 5, 2016

எப்போதும்போல்

எப்போதும்போல்
இப்போதும் தாமதமாகவே
புாிந்துகொண்டிருக்கிறேன்
உன்னை.

என் கசையடிகளில்
களைப்புற்றுக்கிடக்கும் உனக்கு
வாழ்த்தட்டைகளைப் பாிசளிக்கிறேன்.

உன் மழையைக் குடையோடும்
நீ பொழிந்த பனியைக்
குளிராகவும் மட்டுமே எதிா்கொண்டேன்.

என் அறியாமையை அறிந்து கொள்ளுமுன்
என் குளத்தில் கல்லெறிவதை
நிறுத்திப் போயிருந்தாய் நீ.
சலனமில்லாமல்
சவமாய்க்கிடக்கிறேன் நான்.

நீயும் நானும்
ஒரே திசையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம்
நீ முன்னாலும் நான் பின்னாலும்.
உன்னிடத்தை நான் சேரும் நேரம்
நீ வேறிடம் நடந்திருப்பாய்.

வளா்ப்பு நாயின் கயிற்றைப் போல்
உன் கைகளில் என்னைப் பிணைத்திருக்கும்
அரூபக்கயிறாய் இருக்கிறது
உன் காதல்