Tuesday, December 19, 2017

வெளியில் திரியும் உரையாடல்

பயணித்த
நூற்றைம்பது மைல் தூரத்தில்
சிறுவார்த்தையும் பேசாமல்
இறங்கிப்போய் விட்டாள்
அந்தத் தெற்றுப்பல்காரி
அவளுக்கும் எனக்குமிடையே
நிகழ்ந்திருக்க வேண்டிய உரையாடல்
ஊர்ந்து கொண்டிருக்கிறது
அவளிருந்த இருக்கையில்
மென்னகையுடன்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்
நானும்
ஜன்னல் வழி
குதித்து விளையாடும் வெயிலும்.



எழுதியது : 6-ஏப்ரல்-2016
[ஒளிப்படம் : ஜெயேந்திரராஜன்]