Saturday, October 12, 2019

எழுத்துக்களைத் தின்னும் எறும்புகள்


நூலகத்தில்
ஒளியும் காற்றும் அதிகம் படா அடுக்கில்
ஒன்றின் தோளில் இன்னொன்றாக
சாய்ந்து நிற்கின்றன
கவிதைப் புத்தகங்கள்
துருவேறிய சங்கிலியின் கண்ணிகளென
புத்தகத்தின் எழுத்துக்களை இழுத்துக்கொண்டு
ஊர்ந்து செல்கின்றன
எழுத்துக்களைத் தின்னும் எறும்புகள்
எடை குறைந்து நிற்கும் புத்தகங்களில்
இனி வாசிக்கலாம்
கவிஞன் எழுதாத
சில கவிதைகளை.




எழுதிய நாள் 12 செப்டம்பர் 2019

No comments:

Post a Comment