நூலகத்தில்
ஒளியும் காற்றும் அதிகம் படா அடுக்கில்
ஒன்றின் தோளில் இன்னொன்றாக
சாய்ந்து நிற்கின்றன
கவிதைப் புத்தகங்கள்
துருவேறிய சங்கிலியின் கண்ணிகளென
புத்தகத்தின் எழுத்துக்களை இழுத்துக்கொண்டு
ஊர்ந்து செல்கின்றன
எழுத்துக்களைத் தின்னும் எறும்புகள்
எடை குறைந்து நிற்கும் புத்தகங்களில்
இனி வாசிக்கலாம்
கவிஞன் எழுதாத
சில கவிதைகளை.
எழுதிய நாள் 12 செப்டம்பர் 2019
No comments:
Post a Comment