Saturday, October 12, 2019

திசைகள் சேர்கையில்


ஆசப்பட்ட பொம்ம
கைக்கிட்ட வந்திருச்சு
அதுக்குள்ள ஆசயெல்லாம்
வேற நெறம் மாறிடுச்சு
தேடிப்போன பாத தெரிஞ்ச பாத தான?
காலடியில் நிக்கிறத
ஊரெல்லாம் தேடுனயே
தேடுனியா இல்லியாண்டு
இத்தன நாள் தவிச்சிருந்தேன்
ஒங்கண்ண பாத்துப்புட்டேன்
சந்தோசம்,
போயிட்டு வா.
சேத்து வச்ச முத்தமெல்லாம்
ஒப்படைக்கத் தோணல இப்ப
ஒம்பாட்டுக்கு நீ போ
எங்கனவு எனக்குப் போதும்
வேறெதுவும் சொல்ல வேணாம்
என் ஊரு வந்துருச்சு.



எழுதிய நாள் 12 ஆகஸ்ட் 2019

No comments:

Post a Comment