Tuesday, March 23, 2010
நெடும்பயணம்
இருக்கையின்
இரு ஓரங்களில்
அவளும் அவனும்;
இருவரிடையோடும்
விழிகள் தொடாத
பார்வைகளையும்,
மரித்த நாக்குகளின்
மெளனத்தையும்
காற்றில்
கரைக்கின்றன
இருவர்க்கிடையில்
கிடத்திய
புத்தகத்தின் தாள்கள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment